சென்னை: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2026-27 கல்வியாண்டு முதல், 6 மற்றும் 9ம் வகுப்புகளில் குறைந்தபட்சம் ஒரு பிரிவிலாவது (Section) சமஸ்கிருத மொழி கற்பிக்கப்படுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் மும்மொழிக் கொள்கையை சிக்கல் இல்லாமல் அமல்படுத்த, அடிக்கடி இடமாற்றம் ஆகும் ஒன்றிய அரசு ஊழியர்களின் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, இது அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
