ராணிப்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதி விபத்து – 3 பேர் உயிரிழப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலையில் பள்ளிக்கு அழைத்து சென்றபோது வழியில் ஏற்பட்ட விபத்தில் தாத்தா, பேரன், பேத்தி என ஒரேய குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இருசக்கர வாகனத்தில் 4 குழந்தைகளை தனியார் பள்ளிக்கு அழைத்து செல்லும்போது எதிரே வந்த ஆட்டோ மோதியதால் விபத்தில் தாத்தா, பேரன் மற்றும் பேத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் மற்ற இரு குழந்தைகளும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மூவரையும் மீட்டு வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: