முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் போர் விமானம் முதற்கட்ட சோதனை வெற்றி

 

புதுடெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சி-295 ராணுவ போக்குவரத்து விமானத்தின் முதற்கட்ட பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்ததாக இந்திய விமானப்படை தெரிவித்தது. இந்திய விமானப்படை சுமார் ரூ.21,935 கோடி செலவில் 56 சி-295 போக்குவரத்து விமானங்களை கொள்முதல் செய்கிறது. இந்த விமானங்களில், டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து வதோதராவில் உள்ள ஒரு உற்பத்தி ஆலையில் அசெம்பிள் செய்யப்படும்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சி-295 விமானத்தின் வெற்றிகரமான முதற்கட்ட சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதனால் இந்த பரிசோதனை முழு குழுவினருக்கும் இந்திய விமானப்படை வாழ்த்து தெரிவித்தது. அதில், “இந்த சாதனை, இந்தியாவின் வளர்ந்து வரும் விண்வெளி திறன்களை வலுப்படுத்துவதோடு, ‘ஆத்மநிர்பர் பாரத்’ தொலைநோக்கு பார்வையின் கீழ் உள்நாட்டு பாதுகாப்பு திறனை வளர்ப்பதில் இந்திய விமானப்படையின் அர்ப்பணிப்பையும் அடிக்கோடிட்டு காட்டுகிறது” என்று கூறியது.

Related Stories: