திருச்சி, ஜூன் 11:திருச்சியில் மணல் திருடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி காவேரி ஆற்று அருகே மணல் திருடுவதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து ஜூன்.9ம் தேதி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கல்லணை ரோடு காவேரி ஆற்று சூளை அருகே உரிய அனுமதி ன்றி அரை யூனிட் மணல் திருடிய மண்ணச்சநல்லூர் வாத்தலையை சேர்ந்த சிவராஜ் (35), குடித்தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (28) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சூளை உரிமையாளர் கருணாநிதி மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
