விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடி கோரி ஆர்ப்பாட்டம்

திருவெறும்பூர், ஜூன் 5: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் திருவெறும்பூர் அனைத்து பகுதி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் தேர்தல் வாக்குறுதி படி தவெக அனைத்து விவசாயிகளின் பயிர் கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வலியுறுத்தி திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்,

அதேபோல் உயர்த்தியுள்ள உரங்களின் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமை வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ராஜ்குமார், செல்வராஜ், அதிமுக நிர்வாகிகள் எஸ் கே டி கார்த்திக், முத்துக்குமார், திமுக நிர்வாகி தங்கவேல், வேலுச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

Related Stories: