கோவில்பட்டி பள்ளியில் முப்பெரும் விழா

கோவில்பட்டி, மார்ச் 7: கோவில்பட்டி கரா பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளியின் நிர்வாகி செந்தில்குமார் தலைமை வகித்தார். தாளாளர் ஷியாமளா செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் முத்துக்குமார் வரவேற்றார். செயல்இயக்குநர் டென்சிங் பால்ராஜன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். தலைமையாசிரியை கார்த்திகா சிவகணேஷ் சிறப்புரையாற்றினார். விழாவில் நோட்டரி கிளப் முன்னாள் துணை ஆளுநர் கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். ஒன்பதாம் வகுப்பைச் சேர்ந்த மாணவி திவ்ய தேசிய அளவில் ராய்ப்பூரில் நடைபெற்ற யோகா போட்டியில் 11வது இடமும், மாநில அளவில் முதலிடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். வெற்றி பெற்ற அம்மாணவிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.  தூத்துக்குடி மாவட்ட அளவில் நடைபெற்ற அறிவியல் மன்றத்தில்  இப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்து மாநில அளவிற்கு தேர்ச்சி அடைந்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை நிர்வாகத்தினர் பாராட்டினர். பள்ளியின் துணை தலைமையாசிரியை பொன் தங்க மகேஸ்வரி நன்றி கூறினார்.

Related Stories: