சூளகிரி தினசரி சந்தையில் கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை

சூளகிரி, மார்ச் 7:சூளகிரியில் தினசரி சந்தையை அதிமுகவை சேர்ந்த சரஸ்வதி ராஜாராம் என்பவர் ஏலம் எடுத்தார். அவர் சந்தையில் உள்ள கடைக்காரர்கள் மற்றும் நெடுஞ்சாலையில் உள்ள நடைபாதை வியாபாரிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தார். கூடுதல் கட்டணம் தராத வியாபாரிகளை அடியாட்களை வைத்து மிரட்டினார். இதனால், ஆத்திரமடைந்த வியாபாரிகள், போராட்டங்களை நடத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர். இதையடுத்து, சந்தை வளாகத்தில் உள்ள கடைகளுக்கு மட்டும் அரசு நிர்ணயம் செய்த தொகையை வசூலித்து ரசீது வழங்க வேண்டும் என கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி உத்தரவு பிறப்பித்தார். இதுகுறித்து கடைகளுக்கான கட்டண விவரம் அடங்கிய அறிவிப்பு பலகையை, பிடிஓக்கள் சிவக்குமார், சுப்ரமணி ஆகியோர் நேற்று சந்தையில் வைத்தனர். இதனால், சந்தை வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: