இலங்கை முதியோர் இல்லத்தில் தீ விபத்து;12 பேர் பலி

கொழும்பு: இலங்கையின் களுத்துறை மாவட்டத்தில் அங்குருவடோட்டா பகுதியில் தனியார் நிர்வாகத்தின் கீழ் மாவ்பிய செவன என்ற பெயரில் முதியோர் இல்லம் செயல்பட்டு வந்தது. இங்கு 70க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர். நேற்று முன்தினம் மாலை சுமார் 5.30மணியவில் இந்த முதியோர் இல்லத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்தனர்.

நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் வளாகத்திற்குள்ளேயே 10 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்். மேலும் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 50 முதியவர்கள் அருகில் உள்ள பள்ளியில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: