தனது கட்சியினரே குற்றச்செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு விஜய் என்ன பதில் வைத்திருக்கிறார்? அண்ணாமலை கேள்வி

சென்னை: தனது கட்சியினரே குற்றச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு விஜய் என்ன பதில் வைத்திருக்கிறார் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த, தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் மற்றும் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஜெயபால் இருவரும், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றி, கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ள செய்தி மிகுந்த அதிரச்சியளிக்கிறது.

பெண்கள் பாதுகாப்பு குறித்து தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய தவெக தலைவர் விஜய், தனது கட்சியினரே குற்றச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?. குற்றவாளிகள் இருவர் மீதும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இது போல பெண்கள் பாதுகாப்பு கவலைக்குள்ளாகும் படியான சம்பவங்கள் நடைபெறாதவாறு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: