கரூர், மே 25: கரூர் மாரியம்மன் கோயில் கம்பம் விடும் திருவிழா வரும் 27ம் தேதி நடக்கிறது.
திருவிழாவினை முன்னிட்டு மாவிளக்கு மற்றும் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசித்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கம்பம் விடும் திருவிழாவை முன்னிட்டு கடந்த மே 15ம்தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 17ம்தேதி காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.
