மின் வெட்டால் பொதுமக்கள் அவதி

 

கரூர், மே 23: தொடரும் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
தற்போது சுட்டெரிக்கும் கோடை வெயில் உச்சத்தில் உள்ளது.அக்னி நட்சத்திர வெயில் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. ்இந்த வெயில் காரணமாக அனைத்து தரப்பினர்களும் கடும் அவதியை அனுபவித்து வருகின்றனர். இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் கடந்த சில நாட்களாக தினமும் பல முறை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு நடத்தப்படுகிறது. முன் அறிவிப்பின்றி நடத்தப்படும் இந்த மின்வெட்டு காரணமாக முதியவர்களும், சிறுவர், சிறுமிகளும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்

Related Stories: