பெங்களூரு: ஏர் இந்தியா விமானம் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, வால்பகுதி தரையில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக வானில் வட்டமடித்து மீண்டும் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் அனைவரும் வழக்கமான முறையில் விமானத்திலிருந்து வெளியேறியதாகவும் ஏர் இந்தியா கூறியுள்ளது.
