குடிபோதையில் தகராறு உருட்டு கட்டையால் அடித்து செங்கல் தொழிலாளி கொலை

பெ.நா.பாளையம். மார்ச் 3: துடியலூர் இடையர்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயகுமார் (25) செங்கல் தொழிலாளி. இவரும் இவரது நண்பரான சுரேசும், மற்றொறு நண்பரான ஒத்தைக்கால் மண்டபத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் வீட்டில் நேற்று முன்தினம் இரவு மது அருந்தியுள்ளனர். பக்கத்து வீட்டில் தங்கியிருந்த வெள்ளியங்கிரி (52) என்பவர் புரோட்டா சாப்பிட்டுக் கொண்டு இருந்துள்ளார். ஜெயக்குமார் மதுபோதையில் அங்கு சென்று வெள்ளியங்கிரி சாப்பிட்ட புரோட்டாவில் கை வைத்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அந்த நேரத்தில் வெள்ளியங்கிரியின் மனைவியை பற்றி ஜெயக்குமார் தவறாக பேசி கீழே கிடந்த செங்கல்லை எடுத்து தலையில் அடித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வெள்ளிங்கிரி கீழே கிடந்த உருட்டு கட்டையால் ஜெயக்குமாரின் தலையில் அடித்தார். இதில் ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த தடாகம் போலீசார் சம்பவ இடம் சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெள்ளியங்கிரியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: