திருவள்ளூர்: ஒடிசாவில் இருந்து ஆந்திரா வழியே கடத்தி வரப்பட்ட ரூ.2.32 கோடி மதிப்பிலான 465 கிலோ கஞ்சா, செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடியில் சிக்கியது. ட்ரெய்லரின் கீழே ரகசிய அறை அமைத்து கஞ்சாவை கடத்திவந்துள்ளனர். இது தொடர்பாக இருவரைக் கைது செய்து தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை (NCB) நடவடிக்கை எடுத்துள்ளது.
