டெல்லி: சுவேந்து அதிகாரியை ஊழல்வாதி என விமர்சித்த பிரதமர் மோடி இப்போது அவரை முதலமைச்சர் ஆக்கியுள்ளார் என அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம் செய்துள்ளார். சுவேந்து அதிகாரி பாஜகவில் இருப்பதால், அவர் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்காது. ஆனால், என்னைப் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்துவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
