அசாமில் புதிய அரசு மே 12ம் தேதி பதவி ஏற்பு: பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்பு

கவுஹாத்தி: அசாமில் புதிய அரசு வரும் 12ம் தேதி பதவி ஏற்க உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அசாமில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜ ஆட்சி செய்து வந்தது. இங்கு மொத்தமுள்ள 126 பேரவை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 4ம் தேதி எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 102 இடங்களை கைப்பற்றியது.

இந்நிலையில் அசாமில் பாஜ தலைமையிலான புதிய அரசு வரும் 12ம் தேதி பதவி ஏற்க உள்ளது. பதவி ஏற்பு விழாவை சுமூகமாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து மே 12ம் தேதி பதவி ஏற்பு விழா நடத்தப்பட உள்ளது. இதில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள், பாஜ ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

Related Stories: