திருப்பூர், பிப்.26: திருப்பூர் மாநகராட்சியின் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளை உள்ளடக்கியது. பல லட்சம் மக்கள் தொகையும், ஏறத்தாழ 2.5 லட்சம் கட்டிடங்களும், பல்லாயிரம் தொழிற்சாலைகள், கடைகள், அமைந்துள்ளன. ஆண்டுதோறும் இதன் வரவு-செலவு நிதி நிலை (பட்ஜெட்) அறிக்கை, நிதியாண்டு இறுதி வாக்கில் தாக்கல் செய்யப்படுகிறது.
அடுத்த நிதியாண்டுக்கான உத்தேச வரவு மற்றும் செலவினங்கள், மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சித் திட்டப்பணிகள் உள்ளிட்டவை இதில் இடம்பெறும்.