திருப்பூர், பிப்.25: தி.மு.க. மத்திய மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பூர் காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பிரிவில், கடந்த 21ம் தேதி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இருந்து குறைகளை மனுக்களாக பெற்று, அவர்களுடன் கலந்துரையாடினார்.