டெல்லி: சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு 2வது பொதுத் தேர்வு மே 15ம் தேதி தொடங்குகிறது. 2026ம் ஆண்டில் இருந்து சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது. மே மாதம் நடக்கும் 2வது பொதுத்தேர்வை விருப்பமுள்ளவர்கள் மட்டும் எழுதிக் கொள்ளலாம். ஒரு மாணவர் 2வது கட்ட தேர்வில் 3 பாடங்கள் வரை எழுதி, எதில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ, அதை தக்க வைத்துக்கொள்ளலாம்.
