நாமக்கல், பிப்.23: மத்திய அரசின் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்தும், அதற்கு துணை போகும் அதிமுக அரசை கண்டித்தும், நேற்று நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல்லில் திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார் தலைமை வகித்தார். இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன், மாநில நிர்வாகிகள் மணிமாறன், கைலாசம், ராணி, நக்கீரன், முன்னாள் எம்எல்ஏக்கள் ராமசாமி, சரஸ்வதி, மாவட்ட துணை செயலாளர்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மாவட்ட இலக்கிய அணி தலைவர் பழனிசாமி, பொருளாளர் செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளஞ்செழியன், பவித்திரம் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன், தலைமை கழக பேச்சாளர் ராஜகோபால், ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், நவலடி, கௌதம், துரை ராமசாமி, துரைசாமி, ஜெகநாதன், பாலசுப்ரமணியம், பழனிவேல், செந்தில்முருகன், நகர செயலாளர்கள் சங்கர், ராணா ஆனந்த், பூபதி, சிவக்குமார், நிர்வாகிகள் அறிவழகன், ராணி, கதிர்வேல், ஆனந்தன், இளம்பரிதி, மதிவேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.