மேலூர், பிப். 23: மேலூரில் ஒருங்கிணைந்த கால்நடை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மாடு, ஆடு, கோழி ஆகியவை மானிய உதவியுடன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் மாடுகள் வழங்கப்பட்டு விட்ட நிலையில், நேற்று ஆடுகள் வழங்க உள்ளதாக பதிவு பெற்ற விவசாயிகளை கால்நடை துறையினர் அழைத்துள்ளனர். இதற்கு விவசாயிகள் தங்களுக்கு தேவையான ஆடுகளை சந்தைகளில் கொள்முதல் செய்து, பின்னர் அதனை கால்நடை மருத்துமனைக்கு கொண்டு வர வேண்டும். அங்கு அவற்றை சோதனை செய்த பிறகு, அவற்றுக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு, ஆட்டின் காதில் வில்லை ஒட்டப்பட்ட பிறகு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும். அதன்படி நேற்று மேலூர் வாரச்சந்தை என்பதால் அதிகாலை 4 மணிக்கே வந்து ஆடுகளை தேர்வு செய்த விவசாயிகள், அவற்றை கால்நடை டாக்டர்களிடம் காட்டுவதற்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.