மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை

திருப்பூர், பிப்.19: திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துடன் இணைந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது தேவையான நபர்களை தேர்வு செய்தது. இதில் 250க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

இதில் 137 பேர் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிநியமன ஆணை கலெக்டர் விஜயகார்த்திகேயன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சுய தொழில் தொடங்கவும் வங்கிகள் மூலம் கடனுதவி பெறவும் ஆலோசனை வழங்கப்பட்டது. 40 மாற்றுத்திறனாளிகளை திறன் பயிற்சிக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்போது மாவட்ட வேலைவவாய்ப்பு அலுவலர் சுரேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் ஜெயபிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: