காங்கயம், பிப்.19: தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான மு.பெ.சாமிநதான், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக சட்டப்பேர்வை தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதனடிப்படையில் திருப்பூர் கிழக்கு, தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட காங்கயம், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பொதுமக்களை சந்தித்து பொதுப்பிரச்னைகள் குறித்து எழுத்துப்பூர்வமான மனுக்களை நேரில் பெறுகிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் 100 நாட்களில் போர்க்கால அடிப்படையில் உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும். அவ்வாறு வந்த புகார்களை தீர்க்க தனியாக ஒருதுறை ஏற்படுத்தப்பட்டு அந்தந்தத் துறை வாயிலாக பொதுமக்கள் தந்துள்ள புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீங்கள் என்னைக் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காகவே, மனுவுக்குப் பதிவு எண் தருகிறோம். “உங்களுக்காகவே நான், உங்களில் நான்”, நீங்கள் உங்கள் பிரச்சனைகளை என் முதுகில் ஏற்றி வைத்துள்ளீர்கள். உங்கள் பிரச்னைகளை நான் நிச்சயம் தீர்த்து வைப்பேன் என தி.மு.க. தலைவர் உறுதியளித்துள்ளார்.