பொள்ளாச்சி, பிப். 19: பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க கோரி கொமதேக சார்பில் நேற்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர், தன்னார்வல தொண்டு நிறுவனத்தினர், வியாபாரிகள் சங்கத்தினர் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று, பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க கோரி கொமதேக சார்பில் பஸ் நிலையம் அருகே கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கொமதேக மாவட்ட செயலாளர் நித்தியானந்தம் தலைமை தாங்கி, கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். இதில், பொதுமக்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் என பலரும் ஆர்வமுடன் கையெழுத்து போட்டனர். இதையடுத்து, நகர் மற்றும் கிராம பகுதிகளில், கையெழுத்து இயக்கத்தையும் கொமதேகவினர் துவங்கினர்.கொமதேக மாவட்ட செயலாளர் நித்தியானந்தம் கூறுகையில், ‘கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்கப்பட்டால், பொள்ளாச்சி மற்றும் அதனுடன் இணையும் சுற்றுவட்டார தாலுக்காவும் வளர்ச்சியடையும். பொருளாதாரம் உயரும்.