×

தேர்தல் நாளான 23ம் தேதி தமிழகத்தில் நீதிமன்றங்களுக்கு விடுமுறை: உயர் நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 23ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அளித்து சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் 23ம் தேதி வியாழக்கிழமை சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் ஏப்ரல் 23ம் தேதி விடுமுறை அறிவித்து உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் எஸ்.அல்லி அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார்.

இதேபோல், வரும் 9ம் தேதி வியாழக்கிழமை புதுச்சேரி சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளில் ஆஜராகிவரும் வழக்கறிஞர்கள் தங்களின் சொந்த ஊரில் வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,High Court ,Chennai ,Madras High Court ,Tamil Nadu Assembly elections ,Assembly ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்: இருவர் கைது