கலசபாக்கம், பிப்.19: கலசபாக்கம் அருகே ஊராட்சி தலைவர் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி வார்டு கவுன்சிலர்கள் கோரிக்கை மனுவுடன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே வீரலூர் ஊராட்சியில் உள்ளது. ஊராட்சி தலைவராக அதிமுகவை சேர்ந்த ஜான்பாஷா உள்ளார். இந்த ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளது. இந்நிலையில், ஊராட்சி தலைவர் ஜான்பாஷா வார்டு கவுன்சிலர்களை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், ஊராட்சி தொடர்பான கோப்புகளை வீட்டில் வைத்து நிர்வாகம் செய்வதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நேற்று முன்தினம் பிடிஓ விஜயலட்சுமியிடம் வார்டு கவுன்சிலர்கள் புகார் மனு அளித்தனர். இந்நிலையில், நேற்று காலை வீரலூர் ஊராட்சி அலுவலகம் முன்பு, துணைத்தலைவர் கவிதா தலைமையில் வார்டு கவுன்சிலர்கள் கோரிக்கை மனுவுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.