மல்லக்குளம் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நெல்லை, பிப். 18: பாளை. அடுத்த புதுக்குளம் பஞ். மல்லக்குளம், இந்திரா நகரிலுள்ள செயின்ட் ஜான்ஸ் இல்லம் மற்றும் சிறுவர் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. டேனியல் சாலமன் தலைமை வகித்தார். அதிமுக பாளை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன் முன்னிலை வகித்தார். மல்லகுளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கிறிஸ்மஸ் ராணி, சுங்க இலாகா அதிகாரி காபிரியேல், வருமான வரித்துறை அதிகாரி ஜான்மவுன்டி, ஓய்வுபெற்ற உதவி தொடக்க கல்வி அலுவலர் கலைச்செல்வி மற்றும் சுப்பையா, பெரியநாடார், சீனிவாசன், டாக்டர் அணிஜெயராஜ், செல்லத்துரை, எபசேனர் கோயில்பிள்ளை, இசக்கிபாண்டியன், வின்சென்ட் ஜான், செல்வராஜ், கிறிஸ்டோபர், யாசின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: