அவிநாசி, ஜன. 18: அவிநாசி முத்துச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் குதித்து நேற்று தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி முத்துச்செட்டிபாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் தனபால் (55). ஆட்டோ டிரைவரான இவர், தனது மனைவியைப் பிரிந்து தாயுடன் வசித்து வருகிறார். மது அருந்தும் பழக்கம் உள்ளவர். இந்த நிலையில் நீச்சல் தெரியாத தனபால் நேற்று காலை, அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் குதித்து நீரில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டார்.