- விஜய்
- தேர்தல் ஆணையம்
- எம். வீரபாண்டியன்
- சென்னை
- த்வெகா
- வீரபாண்டியன்
- அரசுத்தலைவர்
- கம்யூனிஸ்ட்
- இந்தியக் கட்சி
சென்னை: வாக்காளர்களை பணம் வாங்கச் சொன்ன தவெக தலைவரின் பேச்சானது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை அப்பட்டமாக மீறிய செயல் என்றும், இதை தேர்தல் ஆணையம் கண்காணிக்காதது ஏன்? என்றும் மு.வீரபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் காலத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் கடுமையான விதிமீறலாகும். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும் போது, “ஆயிரம், 2 ஆயிரம், 5 ஆயிரம் என்று கொடுப்பார்கள். அது உங்கள் பணம். பணத்தை வாங்கிக் கொண்டு, அவர்கள் காதில் விசிலை ஊதி அனுப்புங்கள்” என்று பேசியுள்ளார்.
இந்த பேச்சு ஊடகங்களில் விரிவாக வெளியாகியுள்ளது. விஜய், பேச்சு, தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் அனைத்தையும் அப்பட்டமாக மீறியுள்ளது. இது நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் முறைகளை தகர்க்கும் செயலாகும். இந்த விதிமுறை மீறல் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு செல்லாதது வியப்பளிக்கிறது. ஆணையம் அமைத்துள்ள கண்காணிப்புக் குழுக்களின் செயல்பாடுகள் மீது ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது. தேர்தல் ஆணையம் சந்தேகத்தின் நிழல் படியாமல், தனது பணிகளை வெளிப்படையாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் மாதிரி விதிமுறைகளை மீறியுள்ள விஜய் மீது, தேர்தல் ஆணையம் தானே முன் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
