கோயில் உண்டியலில் திருடிய நபர் கைது

காடையாம்பட்டி, பிப்.18: காடையாம்பட்டி அடுத்த ஊமைக்கவுண்டம்பட்டியில்  பழமையான எல்லை காளியம்மன் கோயில் உள்ளது. கடந்த மாதம் 7ம்தேதி நள்ளிரவில், கோயில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில், தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் பிரபாவதி வழக்குபதிவு செய்து, கோயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு ஆய்வு செய்தார். இதனிடையே, இந்த வழக்கில் ஓமலூர் அடுத்த கருப்பனம்பட்டியை சேர்ந்த கார்த்திக்(42) என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர், ஓமலூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: