×

பத்மநாபபுரம் நகராட்சியில் 100 சதவீத வாக்குப்பதிவு உறுதி மொழியேற்பு

தக்கலை, மார்ச் 27 : தமிழக சட்டமன்ற தேர்தலில் குமரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், வாக்காளர் பட்டியில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களை கொண்டு உறுதிமொழி எடுக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி பத்மநாபபுரம் நகராட்சியில் ஆணையாளர் கண்மணி தலைமையில் உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டு உறுதி மொழி எடுத்தனர்.

Tags : Padmanabhapuram Municipality ,Thakkalai ,Election Commission ,Tamil Nadu Assembly elections ,Kumari district ,Commissioner ,Kanmani… ,
× RELATED சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 6ம் தேதி...