மேட்டூர், பிப்.17: மேட்டூர் அடுத்த கொளத்தூரில் பாலமலை அமைந்துள்ளது. அடர்ந்த இந்த வனப்பகுதியில் அரிய வகை மூலிகைகள் உள்ளன. மேலும், வன விலங்குகள் மற்றும் பறவைகளும் வசித்து வருகின்றன. இந்நிலையில், கோடை தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரித்து வருவதால், பல்வேறு இடங்களில் செடி கொடிகள் காய்ந்து அடிக்கடி வனப்பகுதியில் தீப்பற்றி எரிகிறது. இந்நிலையில் நேற்று மேட்டூர் பொன்நகர் அருகே தீப்பற்றி எரியத்தொடங்கியது.