உடுமலைப்பேட்டையில் திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஓட்டல் துவக்கம்

திருப்பூர், பிப். 17: திருப்பூர் உடுமலைப்பேட்டை பழனி ரோட்டில் திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஓட்டல் நேற்று துவங்கியது. இதுகுறித்து திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஓட்டல் தலைமை அதிகாரி அரவிந்த் கூறியதாவது: உடுமலைப்பேட்டையில் எங்களது முதலாவது கிளையை துவக்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். திண்டுக்கல் தலப்பாக்கட்டி பெயரை சொன்னாலே எளிதில் அனைவருக்கும் பிரியாணி நினைவில் வரும். கடந்த 65 ஆண்டுகளாக சைவ அசைவ உணவு வகைகளை தயாரித்து பரிமாறி வருகிறோம். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பரவியுள்ள இந்த ஓட்டல் 80 கிளைகளை கொண்டுள்ளது. அடுத்த நிதி ஆண்டில் இருந்து ஒவ்வொரு மாதமும் 3 முதல் 4  கடைகள் துவங்க உள்ளோம்’ என கூறினார்.

Related Stories: