பெரம்பலூர்,பிப்.16: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 258 மனுக்கள் பெறப்பட்டது. பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக கூட் டரங்கில், மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா தலைமையில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொ கை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, பட்டாகோருதல், பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், காவல்துறை தொடர்பான மனுக்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 258 மனுக்களை கலெக்டரிடம் நேரிடையாக அளித்தனர்.