சாலை விபத்தில் முதியவர் பலி

ஊத்தங்கரை,  பிப்.16: ஊத்தங்கரை அருகே உப்பாரப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் கோவிந்தன்(50).  இவர், நேற்று முன்தனம் ஊத்தங்கரை- திருப்பத்தூர் சாலையில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது,  அப்பகுதியில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக கோவிந்தனின் டூவீலர்  மோதியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த அவர், சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின்பேரில், சம்பவ இடம் வந்த  ஊத்தங்கரை போலீசார், சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: