திருப்பூர், பிப்.16: திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், மடிக்கணினிகள், சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த விலையில்லா புத்தகங்கள் கரையான் அரிப்பதாகவும், அங்கிருந்த விலையில்லா காலணிகள் வீணாகி வருவதாகவும் புகார் எழுந்தது.