நத்தம் அருகே காங்கிரஸ் சார்பில் பிரசார கூட்டம்

நத்தம், பிப். 12: நத்தம் அருகே வத்திபட்டியில்  விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டத்தை கண்டித்தும், அவற்றை திரும்ப பெற வலியுறுத்தியும் காங்கிரஸ் சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் முகமது அலி தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் பில்லான், பழனியப்பன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் அப்துல் கனிராஜா கலந்து கொண்டு மத்திய அரசு விவசாயிகளை பாதிக்கும் வகையிலான சட்டங்கள் கொண்டு வந்ததை கண்டித்தும் மற்றும் அவற்றை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் பேசினார். காங்கிரஸ் நிர்வாகிகள் துரைச்சாமி, சித்திக், சுரேஷ், சுப்பையா உள்ளிட்ட கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: