திருப்பூர்,பிப்.12:திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறையை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டருமான விஜயகார்த்திகேயன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் மாவட்டத்தில் வடக்கு, தெற்கு, அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் என 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதியில் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வி.வி.பேட் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் அனைத்தும் திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் சீலிடப்பட்டு பாதுகாப்பு அறையில் 24 மணி நேரம் துப்பாக்கி ஏந்திய காவலருடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.