இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பெண் தீக்குளித்து தற்கொலை

ஈரோடு, பிப். 11:   ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் விஜயராஜ் (35). கூலி தொழிலாளி. இவரது மனைவி வினோதினி (30). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். விஜயராஜ் சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 5ம் தேதி வேலைக்கு செல்லாமல் இருந்த விஜயகுமாருக்கும், வினோதினிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, விஜயகுமாரை மிரட்டுவதற்காக உடலில் மண்ணெண்ணையை ஊற்றி, தனக்கு தானே தீ வைத்துக்கொண்டார். இதில் படுகாயம் அடைந்த வினோதினியை, விஜயகுமாரும் அக்கம்பக்கத்தினரும் மீட்டு சத்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: