தேசியக் கொடியை அவமதித்ததாக ஹர்திக் பாண்ட்யா மீது வழக்குப்பதிவு!

டெல்லி : டி20 WC வெற்றி கொண்டாட்டத்தின்போது, தேசியக் கொடியை அவமதித்தாக இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புனேவைச் சேர்ந்த வஜித் கான் என்ற வழக்கறிஞரின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவாகி உள்ளது. கொண்டாட்டத்தின்போது தேசியக் கொடியை அணிந்தபடி, காதலி மஹிகா ஷர்மாவுடன் கீழே படுத்திருந்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளிக்கப்பட்டிருந்தது.

Related Stories: