டெல்லி : UAE-லிருந்து குஜராத் நோக்கி வந்து கொண்டு இருந்த தாய்லாந்து நாட்டின் Mayuree Naree சரக்குக் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதல்களின் வீரியம் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும், உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் இந்தியா கண்டிப்பு. அந்தக் கப்பலில் இருந்த 20 மாலுமிகள் மீட்கப்பட்ட நிலையில், என்ஜின் அறையில் சிக்கிய 3 பேர் பலி எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
