நாகை: நாகையில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் நாகையில் உணவகங்கள் மூடப்பட்டுள்ளது. அலங்கார வாசல், நாகூர் கடைத்தெரு, வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களில் சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளது. நாகை வடக்கு பால்பண்ணச்சேரி குடோனில் ஆயிரக்கணக்கான காலி சிலிண்டர்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அரசு நிறுவனங்கள், விடுதிகள், கல்லூரி, மருத்துவமனைகளுக்கு சிலிண்டர் வழங்க முன்னுரிமை அளிக்க நாகை ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
