ஆர்.புதுப்பட்டி அம்மன் கோயிலில் பூச்சாட்டு விழா

நாமகிரிப்பேட்டை, பிப்.11: நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டியில், துலுக்க சூடாமணி அம்மன் கோயிலில், ஆண்டுதோறும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவின் போது சேலம், நாமக்கல், தர்மபுரி, ஆத்தூர், கரூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள். இதற்காக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

மேலும், குற்ற சம்பவங்களை தடுக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, உடனடியாக தண்டனை வழங்கப்படும். இந்த விழாவின் தொடக்கமாக, மரிக்கொழுந்து, மஞ்சள் செவ்வந்தி பூக்களால் கோயிலில் அலங்காரம் செய்து விநாயகர், முனியப்பன், அம்சாயி அம்மனுக்கு பூச்சாட்டு விழா நேற்று நடைபெற்றது.

Related Stories: