மானிய விலையில் நாப்கின்கள் கிடைக்கும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் விரிவுபடுத்தப்படும் : தமிழக அரசு

சென்னை : மானிய விலையில் நாப்கின்கள் கிடைக்கும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் விரிவுபடுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் துவங்கிய மருந்தகங்களில் மானிய விலையில் நாப்கின்கள் விற்பனை செய்யப்படும் என்று ரேஷன் கடைகளில் மானிய விலையில் அல்லது இலவசமாக நாப்கின் வழங்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையை ஏப்.29க்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories: