சென்னை : மாநிலங்களவைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட அன்புமணி வேட்புமனுவை ஏற்றுக் கொள்ள கூடாது என ராமதாஸ் தரப்பு வேட்பாளர் சுவாமிநாதன் மற்றும் அவரது வழக்கறிஞர் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாநிலங்களவைத் தேர்தலில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடந்து வருகிறது. ட்சிகள் சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், எல்.கே.சுதீஷ், தம்பிதுரை, அன்புமணி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.பாமக நிறுவனர் ராமதாசின் உதவியாளர் சுவாமிநாதன் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.
