சென்னை : சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும்” நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் அடுத்த 5 ஆண்டு வளர்ச்சிக்கான திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கிறார். மேலும் துறை வாரியாக அரசின் சாதனைகளை அமைச்சர்கள் எடுத்துரைக்கின்றனர்.
