மயிலாடுதுறை, பிப். 10: மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். தனியார் துறையில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் கணேசன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதேபோல் குத்தாலம் தாலுகா அலுவலகம் முன் 28 மாற்றுத்திறனாளிகள், தரங்கம்பாடி தாலுகா அலுவலகம் முன் 60 மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.