அலுவலர்கள் ஏற்பு கரூரில் கடும் பனி பொழிவு

கரூர், பிப்.10: கரூர் மாவட்டத்தில் நள்ளிரவிலிருந்து அதிகாலை நேரம் வரை கடும் பனி பொழிவால் அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர். கரூரில் காலை வரை அதிகளவு பனிப்பொழிவு வாட்டி வதக்கி வருகிறது. இதில் காலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் பனிப்பொழிவு தொடர்ந்து இருந்து வருவதால், அதிகாலை நேரங்களில் நடைப்பயிற்சி செல்பவர்களும், மற்ற பணிகளுக்கு செல்லும் அனைத்து தரப்பினரும் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு இருக்கும் எனவும், அதற்கு பிறகு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் கூறப்படுவதால் பனியின் தாக்கம் எப்போது குறையும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர்.

Related Stories: