கட்டிட தொழிலாளி மர்மச்சாவு

சேலம், பிப்.9: சேலம் அருகேயுள்ள கருப்பூர் தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் சரவணன்(29). கட்டிட தொழிலாளி. இவருக்கு சுமதி(27) என்ற மனைவியும் 6 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு மனைவியிடம் செல்போனை கொடுத்து சார்ஜ் போடுமாறு கூறிவிட்டு டூவீலரில் சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. நேற்று காலை அதே பகுதியில் உள்ள காட்டில் தனபால் என்பருக்கு சொந்தமான கிணற்றின் வெளியே டூவீலர் இருந்தது. செருப்பும் அருகில் இருந்தது. இதனால் சரவணன் கிணற்றில் மூழ்க்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து கருப்பூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடினர். அங்கிருந்து சரவணன் சடலமாக மீட்கப்பட்டார்.

மனைவியிடம் பேசிவிட்டு டூவீலரில் சென்ற சரவணன் எப்படி கிணற்றில் விழுந்தார்? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை யாராவது அங்கு அழைத்து வந்து, கிணற்றில் தள்ளி கொன்றார்களா? என்ற கேள்வியுடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: