அகாபுல்கோ: மெக்சிகன் ஓபன் ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் நேற்று, இத்தாலி வீரர் ஃபிளேவியோ கோபோலி சிறப்பான வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். மெக்சிகன் ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டிகள் அகாபுல்கோ நகரில் நடந்து வந்தன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் இத்தாலி வீரர் ஃபிளேவியோ கோபோலி (23), அமெரிக்காவின் பிரான்சஸ் டியாஃபோ (28) உடன் மோதினார்.
முதல் செட்டில் இரு வீரர்களுக்கும் சளைக்காமல் ஆக்ரோஷமாக மோதியதால் டைபிரேக்கர் வரை நீண்டது. இறுதியில் அந்த செட்டை 7-6 (7-4) என்ற புள்ளிக் கணக்கில் கோபோலேி வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய அவர் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டையும் கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற கணக்கில் நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய அவர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
